Header Ads



தேங்காய் விவகாரத்தினால், ஒரு கொலை


ரத்கம, ரணபனாதெனிய பிரதேசத்தில் இன்று (14) மாலை  ஒருவரை தேங்காய் உரிக்கும் கருவியால் குத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


சந்தேக நபர் நாளை (15) காலி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.


ரத்கம, கனேகொட, வலகட பகுதியைச் சேர்ந்த 49 வயதானே நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.


தடல்லகே விமலசேன பிரதேசத்தைச் சேர்ந்த வயதான நபரே சம்பவத்தில் உயிரிழந்தார்.


இந்த கொலைச் சம்பவம் நேற்று (12) மாலை 5.47 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும், அன்று இரவு 7.00 மணியளவில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதாகவும் ரத்கம பொலிஸார் தெரிவித்தனர்.


உயிரிழந்தவர் ரத்கம, ரணபனதெனிய பிரதேசத்தில் இரண்டு ஏக்கர் தென்னை காணியின் உரிமையாளராவார்.


இறந்தவருடன் அவரது தாயும் அவரது தாயாரின் சகோதரியும் வசித்து வருவதாகவும், இறந்தவரின் மனைவி மற்றும் பிள்ளைகள் துபாயில் வசித்து வருவதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.


இறந்தவருக்குச் சொந்தமான தென்னை காணியில் சந்தேகநபர் 10 தேங்காய்களை பறித்து விற்பனை செய்ததாகவும் அது தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் அதிகரித்து இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக ரத்கம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

No comments

Powered by Blogger.