Header Ads



ரியாத் மாகாண ஆளுநருடன், சவுதிக்கான இலங்கைத் தூதுவர் சந்திப்பு


சவுதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் ரியாத் மாகாண ஆளுநர்  பைசல் பின் பந்தர் பின் அப்துல் அஸீஸ் அவர்களுடன் சிநேகபூர்வமான ஒரு சந்திப்பை மேற்கொண்டார். 


மேற்படி சந்திப்பின் போது தூதுவர் அமீர் அஜ்வத் அவர்கள், இவ்வாண்டு இலங்கை மற்றும் சவுதி அரேபியாவுக்கிடையிலான இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 50 ஆண்டுகள் பூர்த்தியாவதை நினைவுபடுத்தியதுடன்,  இரு நாடுகளுக்குமடையிலான தொடர்புகள் உயர் அடைவுகளைக் காண்பதற்காக இருதரப்பு உறவுகள் மேலும் மேம்படுத்தப்பட முடியும் எனவும் வலியுறுத்தினார். 


தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த தூதுவர், சவுதி அரேபியாவின் 2030 இலக்குகளை அடைந்து கொள்வதில் பங்களிப்பை வழங்குவதற்கு இலங்கை தயாராக உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

No comments

Powered by Blogger.