Header Ads



இஸ்ரேலிய பிரஜை, இலங்கையில் உயிரிழப்பு


பொத்துவில் அக்கரைப்பற்று வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி இஸ்ரேலிய  பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார்.


இந்த விபத்தானது நேற்று (01) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன்போது, 23 வயதான இஸ்ரேலிய பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.


விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில், பொத்துவில் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் அதே திசையில் பயணித்த உழவு இயந்திரத்தின் பின்புறத்தில் மோதியுள்ளது.


இதன்போது, மோட்டார் சைக்கிள் ஓட்டுநரான இஸ்ரேலிய பிரஜை படுகாயமடைந்த நிலையில் பொத்துவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.


இந்தநிலையில், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொத்துவில் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.