Header Ads



மொட்டுக் கட்சியில் இணைவாரா ரணில்..?


தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் அங்கத்துவம் பெற்றால் தேர்தலில் போட்டியிடுவது குறித்து பரிசீலிக்கலாம் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளரை எதிர்வரும் காலங்களில் மொட்டு கட்சி முன்வைக்க தயாராக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சாகர மேற்கண்டவாறு விளக்கமளித்துள்ளார்.


இது தொடர்பில் சாகர மேலும் தெரிவிக்கையில்,


“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் நாங்கள் எந்தவொரு குறிப்பிட்ட கருத்தையும் முன்வைக்கவில்லை.


சரியான நபர் தொடர்பில் சரியான நேரத்தில் முன்வைக்கப்படும். எங்கள் கட்சி பொதுவுடமைக் கொடியின் கீழ் ஒரு வேட்பாளரை நிலைநிறுத்தும். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் ஒருவர் மொட்டு சின்னத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார்.


இதன்படி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி மொட்டு கட்சியில் இணையலாம். அப்படி நடந்தால் அவரை முன்னிறுத்த அப்படியானால் பரிசீலிப்போம்” என்றார். 

No comments

Powered by Blogger.