Header Ads



அக்குறணையில் பாரிய தீ


அக்குறணை நகரிலுள்ள ஹோட்டல் ஒன்றில் பாரிய தீ ஏற்பட்டுள்ளது.


குறித்த ஹோட்டலில் சுமார் 50 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் உள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், தீயை அணைப்பதில் சிக்கல் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


குறித்த ஹோட்டல் அமைந்துள்ள மிகப் பாரிய கட்டடம் அக்குறணையில் உள்ள வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமானது என தெரிவிக்கப்படுகின்றது.


இதேவேளை குறித்த தீ பரவல் காரணமாக கண்டி – மாத்தளை A9 பிரதான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


குறித்த தீ அதற்கு அருகிலுள்ள பல கடைகளுக்கும் பரவியுள்ளதா பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.