Header Ads



நீண்ட நாட்களின் பின்னர் சஜித்துடன், றிசாத்


பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ் 297 ஆவது கட்டமாக 1,177இ000 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் மற்றும் அகராதிகள் என்பன வன்னி, மன்னார் புனித ஜோசப் கல்லூரிக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு ஜூலை 08 ஆம் திகதி இடம்பெற்றது.


இதன்போது, பாடசாலை நூலகத்திற்குத் தேவையான ஆங்கில நூல்களைக்  கொள்வனவு செய்து கொள்வதற்கு பாடசாலை அபிவிருத்தி நிதியத்திற்கு ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் வழங்கி வைக்கப்பட்டது.


இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனும் பங்கேற்றார்.


நீண்ட நாட்களாக சஜித் பங்கேற்கும் நிகழ்வுகளில் ரிஷாத் பதியுதீனை காண முடியாமல் இருந்த நிலையில் இன்றைய நிகழ்வுகளில் இருவரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.