Header Ads



குவைத்திலிருந்து ஒரு சோகமான தகவல்


குவைத்தில் ஒரு சோகமான செய்தி தற்போது வெளியாகியுள்ளது.


குவைத்தில் இந்தியா, கேரளா மாநிலம் திருவல்லா பகுதியை சேர்ந்த மேத்யூ (38), அவரது மனைவி லினி (35), மகன் ஐசக் (7), மகள் ஐரின் (13) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.


செய்தி  நேற்று (19/07/24) வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு தான் அவர்கள் விடுமுறை முடித்து வீட்டில் இருந்து குவைத் திரும்பினார். 


பயணக்களைப்பின் காரணமாக அவர்கள் சீக்கிரமாக தூங்கச் சென்றுவிட்டனர்.


இரவு ஒன்பது மணியளவில் குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது. 


உறங்கிக் கொண்டிருந்ததால், தீப்பற்றியதை அவர்களால் அறிய முடியவில்லை. 


பின்னர் தீயணைப்பு துறையினர் வந்து அடுக்குமாடி குடியிருப்பின் கதவை உடைத்து அவர்களை வெளியே கொண்டு வந்தனர். ஆனால் நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது.

No comments

Powered by Blogger.