Header Ads



இன்று மாலை அவசர, அமைச்சரவைக் கூட்டத்தில் என்ன நடந்தது...?


-TM -

ஜனாதிபதி தலைமையில் இன்று மாலை (24) அவசரமா கூடிய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.


அதன்படி, பொலிஸ் மா அதிபர் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் சட்ட அம்சங்களை ஆழமாக ஆராய்ந்து எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் அமைச்சரவையின் முடிவை அறிவிப்பதற்கு  இதில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


தேஷபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றுவதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவை உயர் நீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ளது.


இதன்படி, இந்த இடைக்கால உத்தரவின் போது சட்டத்திற்கு அமைய பொலிஸ் மா அதிபர் பதவிக்கு பொருத்தமான நபரை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.