Header Ads



நீச்சல் தடாகத்தில் மூழ்கி 7 வயது சிறுவன் வபாத்


கண்டியில் உள்ள விடுதி ஒன்றின் நீச்சல் தடாகத்தில் மூழ்கி , 7 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளதுடன், அவரது மூத்த சகோதரரும் அதே நீச்சல் குளத்தில் மூழ்கி கவலைக்கிடமான நிலையில் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது .


சம்பவத்தில் வெரெல்லகம, குருதுகொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த மொஹமட் மிஸ்ஜான் என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார் .


உயிரிழந்த சிறுவன் தனது குடும்பத்துடன் நேற்று (28)அன்று விடுமுறையை கழிப்பதற்காக விடுதிக்கு சென்றுள்ளனர்.


இதன்போது அங்குள்ள நீச்சல் தடாகத்திற்கு அருகில் தனியாக இருந்த போது நீச்சல் குளத்தில் விழுந்துள்ளார் . அதை கண்ட அவரது மூத்த சகோதரன் நீச்சல் தடாகத்தில் குதித்து தனது தம்பியை காப்பாற்ற முயன்ற போது அவரும் நீரில் மூழ்கியுள்ளார் .


இந்நிலையில் மீட்கப்பட்ட சிறுவன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளதுடன், மூத்த சகோதரன் சிகிச்சை பெற்று வருவதாக தெரியவந்துள்ளது .


மேலும், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கண்டி தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.