Header Ads



நீர்கொழும்பு களப்பில் 6 டிங்கி படகுகளுடன் 2 பேர் கைது


- இஸ்மதுல் றஹுமான் -


     இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்திவந்த பீடி இலை அடங்கிய 76 பொதிகளுடன் அதனை ஏற்றிவந்த 6 டிங்கி படகுகளை கடற்படையினர் கைபற்றியதுடன் இரு சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.


      கடற்படை களனி முகாமுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய செயல்பட்ட கடற் படையினர் தண்டுகம் ஓயா ஆறு நீர்கொழும்பு களப்பில் சங்கமிக்கும் பிரதேசத்தை சுற்றிவலைத்து நடாத்திய சோதனையின் போது இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளன.


  கைபற்றப்பட்ட பீடி இலை பொதிகளில் 1780 கிலோ கிராம் பீடிஇலைகள் இருந்துள்ளன. 


    நீர்கொழும்பு, அலுத்குருவ,பிடிப்பன தெற்கைச் சேர்ந்த வேவலகே சுனித் சன்ஜீவ பிரனாந்து, வென்னப்புவ,உல்ஹிடியாவைச் சேர்ந்த வர்ணகுலசூரிய லஹிரு தினேஷ் மதுரங்க ஆகிய இருவருமே கைது செய்யப்பட்டனர்.


 மேலதிக விசாரணைகளுக்காக கைபற்றப்பட்ட பொருட்களையும் இரு சந்தேக நபர்களையும் நீர்கொழும்பு கலால் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.


No comments

Powered by Blogger.