Header Ads



கணவனிடம் 5 மில்லியன் கப்பம் கேட்டு தொல்லை


கர்ப்பிணியான மனைவியும் அவளுடைய காதலனும் கணவனிடம் சுமார் 5 மில்லியன் ரூபாவை கப்பமாகக் கேட்டு தொல்லை கொடுத்த சம்பவமொன்று கலவானை பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.


கர்ப்பிணி பெண்ணொருவர் சில நாட்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்தார். அவரை கலவான பொலிஸ் பிரிவிலுள்ள கோவிந்தபுரத்தில் கடந்த சனிக்கிழமை (13) மாலை பொலிஸார் கண்டுப்பிடித்தனர்.


கர்ப்பிணியான அந்தப் பெண், மாதாந்த கிளினிக்குக்குச் செல்வதாகக் கூறிவிட்டு, 9ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வீட்டைவிட்டுச் சென்றிருந்தார். எனினும், அன்றையதினம்  தனது மனைவி, வீட்டுக்குத் திரும்பவில்லை என அவளுடைய கணவன், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.


இந்நிலையில், அவளை விடுவிக்கவேண்டுமாயின் 5 மில்லியன் ரூபாய் பணத்தை கொடுக்கவேண்டுமென, இனந்தெரியாத தொலைபேசி அழைப்பொன்று, கணவனின் அலைபேசிக்கு வந்துள்ளது. அத்துடன், வட்ஸ்அப்க்கும் குறுந்தகவல் போடப்பட்டுள்ளது.


இதுதொடர்பில் பொலிஸாரின் கவனத்துக்கு அவளுடைய கணவன் கொண்டுவந்தார். அவற்றை கொண்டு விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் 31 வயதான பெண்ணையும் அவளுடைய காதலன் என அறியப்பட்ட 21 வயதான இளைஞனையும் கைது செய்தனர்.


இணையத்தளத்தின் ஊடாக இன்றைக்கு 5 மாதங்களுக்கு முன்னர் தொடர்பில் இருந்த இவ்விருவரும் பின்னர் காதலர்களாக மாறிவிட்டனர். காதல் வலையில் விழுந்த அவளை, சியம்பலாண்டுவ நகருக்கு வரவழைத்த காதலன். அவளை, கலவான வெத்தேகொட பகுதியிலுள்ள தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.


அங்குவைத்தே, கணவனிடமிருந்து கப்பம் பெறுவதற்கான அழைப்பை ஏற்படுத்தியுள்ளார். விசாரணைகளின் பிரகாரம் இவ்விருவரையும் கைது செய்த பொலிஸார், அந்த இளைஞனை சியம்பலாண்டுவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றத்தின் உத்தரவின் பிரகாரம் எதிர்வரும்18ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


இந்நிலையில் கர்ப்பிணியான அந்தப் பெண், அவளுடைய பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 

No comments

Powered by Blogger.