Header Ads



2 மாணவர்களின் நற்செயற்பாடு


கண்டியிலுள்ள பாடசாலையொன்றின் இரண்டு மாணவர்கள் வீதியில் பெண்ணொருவரினால் தவறவிடப்பட்ட பணப்பை மற்றும் தங்கப் பொருட்களை கண்டெடுத்து உரிமையாளரிடம் வழங்கியுள்ளனர்.


90000 ரூபாய் பெறுமதியான தங்கப் பொருட்கள் மற்றும் பணம், பணப்பையை வீதியிலிருந்து எடுத்து தனது ஆசிரியரிடம் கொடுத்து உரிமையாளரிடம் வழங்கியுள்ளனர்.


இந்த  மாணவர்கள் கண்டி மெனிக்ஹின்ன உயர்தரப் பாடசாலையில் 9ஆம் ஆண்டில் கல்வி கற்று வருகின்றனர்.


மதுசங்க ருக்ஷான் (13), யசித் சமல் ரத்நாயக்க (13), மற்றும் இசுரு சமத்சேனாதிர (13) ஆகியோர் நடன வகுப்பிற்கு சென்று கொண்டிருந்த போது, ​​தரையில் கிடந்த பணப்பையை கண்டு அதனை எடுத்து பாடசாலை நடன ஆசிரியரிடம் ஒப்படைத்துள்ளனர்.


இதனையடுத்து அதிபர் ஊடாக உரிமையாளரின் விபரங்களை உறுதிப்படுத்தி, பாடசாலைக்கு அழைத்து பணம் மற்றும் தங்கப் பொருட்கள் அடங்கிய பணப்பையை அவரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


குறித்த மாணவர்களின் செயற்பாட்டிற்கு பலரும் தமது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

No comments

Powered by Blogger.