Header Ads



இங்கிலாந்தில் 17 வயது சிறுவன் வெறிச் செயல் - 2 சிறுவர்கள் பலி - 8 பேர் கவலைக்கிடம்


இங்கிலாந்தின் சவுத்போர்ட் (Southport) பகுதியில் நேற்று (29) இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


சிறுவர் நடன பயிற்சிப் பட்டறை ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.


இச்சம்பவத்தில் மேலும் 9 பேர் காயமடைந்துள்ளதுடன் அவர்களில் 6 சிறுவர்கள் மற்றும் இச்சம்பவத்தை தைரியமாக முன்னின்று தடுக்க முற்பட்ட இரண்டு பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


கத்திக் குத்துச் சம்பவத்தை மேற்கொண்ட 17 வயது சிறுவனை பொலிசார் கைது செய்துள்ளனர்.


இந்த கத்திக்குத்துக்கான காரணம் தெளிவில்லை எனவும், இது பயங்கரவாதச் செயல் அல்ல எனவும் அந்நாட்டு பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.