Header Ads



மூத்த தளபதியை இழந்தது ஹெஸ்பொல்லா - இஸ்ரேலுடன் போர் வெடித்ததில் ஏற்பட்ட மிகப்பெரும் இழப்பு

தெற்கு லெபனானில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில், ஒரு மூத்த ஹெஸ்பொல்லா தளபதி கொல்லப்பட்டுள்ளார்


அக்டோபரில் இஸ்ரேலுடன் போர் வெடித்ததில் இருந்து ஹெஸ்பொல்லா குழுவில் இருந்து, மிகவும் மூத்தவர் என்று பாதுகாப்பு ஆதாரங்களை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.


அபு தலேப் என்று அழைக்கப்படும் தலேப் அப்துல்லாவை ஜூவாயா நகரில் விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். அவருடன் மேலும் மூவரும் கொல்லப்பட்டனர். 


ஒரு சந்திப்பின் போது அவர்கள் குறிவைக்கப்பட்டிருக்கலாம் என்று ராய்ட்டர்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.


லெபனானின் தெற்கு எல்லையின் மத்தியப் பகுதிக்கு அப்துல்லா ஹெஸ்பொல்லாவின் தளபதி என்றும், ஜனவரியில் கொல்லப்பட்ட மற்றொரு உயர்மட்ட ஹெஸ்பொல்லா தளபதியான விஸ்ஸாம் அல்-தவிலுக்கு மூத்தவர் என்றும் ஆதாரங்கள் தெரிவித்தன.

No comments

Powered by Blogger.