Header Ads



பலஸ்தீனியர்களுக்கு கருணை காட்டியதற்காக நிகழ்ந்த அநியாயம்


பாலஸ்தீனியர்கள் மீது கருணை காட்டியதற்காக அநியாயமாக பணிநீக்கம் செய்யப்பட்ட அமெரிக்க செவிலியர் ஹெசன் ஜாபர், தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.


"பாலஸ்தீன சார்பு அடையாளம் மற்றும் நிலைப்பாட்டிற்காக நீக்கப்பட்ட பலரில் நானும் ஒருவன்," என்று அவர் கூறினார்.


"அது நிறுத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.


'காசாவில் தற்போதைய இனப்படுகொலையின் போது எனது நாட்டைச் சேர்ந்த பெண்கள் நினைத்துப் பார்க்க முடியாத இழப்பை சந்தித்து வருவதைப் பார்ப்பது எனக்கு வேதனை அளிக்கிறது' என்று அவர் உரையின் போது கூறினார்.


பாலஸ்தீனத்திற்கு ஆதரவான கருத்துக்களை தெரிவித்ததற்காக அநியாயமாக பணிநீக்கம் செய்யப்பட்டதாகக் கூறி, நாட்டின் மிகப்பெரிய முஸ்லிம் சிவில் உரிமைகள் அமைப்புக்கள்  இவரது நீதிக்காக போராடுகின்றன.


இவரது சேவைக்காக, இவர் பாராட்டி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.