Header Ads



2 மாணவர்களின் உயிரைக் குடித்த நீர்கொழும்பு கடல் - நடந்தது என்ன..?


- எம். இஸட் .ஷாஜஹான் -


நீர்கொழும்பு குடாபாடு மீனவர் துறைமுகத்திற்கு அருகில் நேற்று கடலில் நீராடச் சென்ற   மாணவர்கள்  இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.   


நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியில்  கல்வி பயிலும்   மாணவர்களே இதில்  உயிரிழந்தவர்களாவர்.


நேற்று  ஐந்து மாணவர்கள் குடாப்பாடு   கடலில் நீராடச் சென்ற நிலையில், அவர்களில் இருவர் கடலில் மூழ்கியுள்ளனர். 


ஏனையவர்கள் அந்த இருவரையும் காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர். இந்நிலையில் பிரதேசவாசிகள் கடும் முயற்சி செய்து மூவரை காப்பாற்றி உள்ள நிலையில் இருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். 


நீர்கொழும்பு  கடற்கரை தெருவை சேர்ந்த யோகநாதன் நிதிஷ் (17), அஸரப்பா வீதியை சேர்ந்த ராஜதுரை அரவிந்தன் (17) ஆகியோரே உயிரிழந்தவர்களாவர்.


இறந்தவர்களின் சடலம் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.