Header Ads



யாழ்ப்பாணம் ஜின்னா மைதானத்தில், பெருநாள் தொழுகை நிறைவேற்றிய முஸ்லிம்கள்

யாழ்ப்பாணம் முஸ்லிம் மக்களின் ஈதுல் அல்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை வழமை போன்று இம்முறையும் யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரி ஜின்னா மைதானத்தில் இன்று (17) காலை 6.30 மணியளவில் மௌலவி எம்.ஏ.பைசர் (மதனி) தலைமையில் இடம்பெற்றது. இன்றைய பெருநாள் தொழுகையானது மர்யம் மஸ்ஜித்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றிருந்தது.


பெருநாள் தொழுகைக்காக ஜின்னா மைதான திடலில் இன்று ஆண்கள், உலமாக்கள், பெண்கள், முதியவர்கள், இளைஞர்கள், யுவதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், யாழ்ப்பாணம் தேசியக் கல்வியற் கல்லூரி மாணவர்கள் மற்றும் சிறுவர்கள் என சுமார் ஆயிரக்கணக்கானோர் அணிதிரண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


யாழ்ப்பாணத்தில் ஒரு சில பள்ளிவாயில்களிலும் பெருநாள் தொழுகை இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.



தகவல்

என்.எம்.அப்துல்லாஹ்





No comments

Powered by Blogger.