Header Ads



போராட்டத்தில் குதித்த தேரரை, தூக்கிச்சென்ற பொலிஸார்


நாடாளுமன்றத்திற்கு அருகில் எதிராக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பலாங்கொட கஸ்ஸப தேரர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


குறித்த கைது நடவடிக்கையானது, இன்று (06.06.2024) தலங்கம பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 


அவர், உத்தேச மின்சாரக் கட்டணத்திற்கு எதிராக எதிர்ப்புப் பலகையை ஏந்தியவாறு நாடாளுமன்றத்திற்கு அருகில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். 


இந்நிலையில், உண்ணாவிரத போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு சுமார் 10 நிமிடங்களில் தலங்கம பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து அவரை கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.