Header Ads



என் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் சபாநாயகருக்கும் அதில் பொறுப்பு


ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தாம் எதிர்நோக்குவதாகக் கூறப்படும் அச்சுறுத்தல்கள் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது..


பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், பொலிஸ் மா அதிபர் தேஸ்பந்து தென்னகோனுக்கு வழங்கிய உத்தரவின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.


இன்று (07) பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றியஹர்ஷ டி சில்வா, பல சவால்களுக்கு மத்தியில் தான் நிதிக்குழுவின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டதாக தெரிவித்தார்.


தமக்கு அலுவலகம் இல்லை எனவும் சேவை செய்வதற்கு மூன்று பேர் மாத்திரமே உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள  ஹர்ஷ டி சில்வா சில சமயங்களில் தமது தனிப்பட்ட பணத்தில் அவர்களுக்கு வேதனம் கொடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


அத்துடன், நிலக்கரி விவகாரம், சீனி மோசடி, மத்திய வங்கியின் சம்பளப் பிரச்சினைகள் குறித்து நிதிக் குழு தொடர்ந்தும் பேசி வருவதாகத் தெரிவித்த அவர்,  தாம்  பல பிரச்சினைகளில் சிக்கியுள்ளதாக தெரிவித்தார்.


விமான நிலையத்தில் விசா விவகாரம் தொடர்பிலும் இவ்வாறானதொரு நிலை காணப்படுவதாகவும், இந்த சம்பவத்தை மூடி மறைக்க முயற்சிப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.


யாருடைய நலன்களுக்காக இப்படிச் செய்கிறார்கள் என்று கேள்வி எழுப்பிய அவர், தன் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் சபாநாயகருக்கும் அதில் பொறுப்பு உண்டு என்றார்.

No comments

Powered by Blogger.