Header Ads



வாகன விபத்தில் வீதியில், நின்றவர்கள் உடல்சிதறி மரணம்

மாங்குளம் - பனிக்கன்குளம் பகுதியில் ஏ9 வீதியின் 228 வது கிலோமீற்றர் பகுதியில் நேற்று இரவு 11 மணியளவில் இடம்பெற்ற கோர விபத்தில் மூவர்  உயிரிழந்ததோடு இருவர் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதிசொகுசு பேருந்து ஒன்று பழுதடைந்ததன் காரணமாக ஏ9 வீதியில் 228 வது கிலோமீற்றர்  பகுதியில்  நிறுத்தி வைக்கப்பட்டிருந்துள்ளது.


இதன்போது பேருந்தில் வருகை தந்தவர்கள் இறங்கி பேருந்தின் பின்புறமாக நின்று கொண்டிருந்த போது அதே திசையில் வருகை தந்த லொறி ஒன்று குறித்த நபர்கள் மீதும் பேருந்தின் மீதும் மோதியுள்ளது.


இதில்  வீதியில் நின்ற நபர்கள்  மூவர் தூக்கி வீசப்பட்டு உடல்சிதறி  பலியாகியுள்ளனர்


லொறியின்  சாரதி மற்றும் பேருந்தில்  பயணித்த  இன்னொருவர் என இருவர் படுகாயம் அடைந்த நிலையில்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் 


சம்பவ இடத்திற்கு சென்ற மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் . 





No comments

Powered by Blogger.