Header Ads



மஸ்க் ஒர் பொருளாதார கொலையாளி


உலக செல்வந்தவர்களில் ஒருவரான எலான் மஸ்க் தொடர்பில் தாம் வெளியிட்ட கருத்துக்காக மன்னிப்பு கோருவதாக தேசிய மக்கள் சக்தியின் அரசியல் பீட உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.


தேசிய மக்கள் சக்தியின் வர்த்த மாநாடு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


தாம் வெளியிட்ட வார்த்தையொன்று பிழையான வகையில் சமூக ஊடகங்களில் பிரச்சாரம் செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


மேலும், எலான் மஸ்கை “அந்த ஆள்” என தாம் விளித்தற்காக வருந்துகிறேன். ஊர்களில் பேச்சு வழக்கில் பேசுவது போன்று இந்த வார்த்தையை பயன்படுத்திவிட்டேன்.


மஸ்க் ஒர் பொருளாதார கொலையாளி என கூறினேன். தமது வார்த்தைப் பிரயோகத்தினால் மஸ்கிற்கு அபகீர்த்தி ஏற்பட்டிருந்தால் அதற்காக வருந்துவதாகத் தெரிவித்துள்ளார். 

1 comment:

  1. பொய்யை உளருவதும் எந்த ஆராய்ச்சி, முக்கிய நபர்கள் பற்றி எந்த ஞான மோ அறிவோ இன்றி வாயில் வந்தவற்றையெல்லாம் உளறிவிட்டு பின்னர் வகையாக மாட்டிக் கொண்டபின் வாயலவில் மன்னிப்புக் கோருவதும் பின் அது பற்றி நாவில் வருந்துவதும் ஜேவீபியின் கொள்கையாகி விட்டது. இதுபோன்ற ஒரு கட்சி ஆட்சிக்கு வந்தால் பொதுமக்களைப் பாதிக்கும் தீர்மானங்களை எடுத்துவிட்டு பின் அதுபற்றி போலி வருத்தம் தெரிவிப்பதால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட இழப்பு, நட்டம், பாதகமான விளைவுக்கு யார் பொறுப்பாவார்? எனவே உங்கள் பெறுமதியான வாக்குகளை மிகவும் நிதானமாக யோசித்து, பலமுறை சிந்தனை செய்து உங்கள் சந்ததியினரின் எதிர்காலத்தை முன்வைத்து வாக்களியுங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.