Header Ads



இப்படியும் ஒரு காதலன்


குருநாகலின் தனது தந்தையின் சுமார் 16 லட்சம் பெறுமதியான தங்க நகைகளை திருடி காதலிக்கு செலவு செய்த மகன் மற்றும் காதலியின் தந்தை ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


காதலிக்கு அன்பளிப்பு பொருட்களை கொள்வனவு செய்வதற்காக காதலியின் தந்தையுடன் திருடிய நகைகளை அரச வங்கியில் அடகு வைப்பதற்காக சென்ற போது கைது செய்யப்பட்டுள்ளனர்.


கைது செய்யப்பட்டவர் அவற்றைத் திருடியவரின் மகனும் அவரது காதலியின் 54 வயதுடைய தந்தையும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


தங்க நகை மற்றும் பணத்தை பத்திரமாக வைத்து விட்டு தந்தை தனது தொழில் நிமித்தமாக சென்றுள்ளார். இதன்போது வீட்டிற்கு நுழைந்த மகன் அதனை திருடிக் கொண்டு வீட்டில் இருந்து தப்பி சென்றுள்ளார்.


இந்த நிலையில் அதனை அடகு வைப்பதற்காக செல்வதாக தந்தைக்கு கிடைத்த முறைப்பாட்டிற்கமைய, பொலிஸாரின் உதவியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.


சோதனையின் போது, ​​அடகு வைக்கப்படவிருந்த 03 தங்க சங்கிலிகள், 04 மோதிரங்கள், 03 பென்டன்ட்கள், ஒரு கை சங்கிலி மற்றும் இரண்டு ஜோடி காதணிகள் ஆகியவற்றைக் கண்டுபிடித்துள்ளனர்.


அந்தப் பணத்தில் தன் காதலிக்கு பரிசுகள் வாங்கத் தயாராக இருந்ததும் தெரியவந்துள்ளது. மேலும் திருடப்பட்ட 58,000 ரூபாய் பணத்தில் ஐந்நூறு ரூபாய்க்கும் குறைவாகவே வைத்திருக்கிறார்.


எல்லாவற்றையும் செலவழித்து அவருக்கும் காதலிக்கும் ஒரு ஸ்மார்ட் கையடக்க தொலைபேசி மற்றும் இரண்டு பவர் பேங்க் வாங்கிக் கொடுத்துள்ளார்.


23 வயதான சந்தேக நபர் மூன்று வன்முறை குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்குகள் இன்னும் விசாரணையில் இருப்பதாகவும், சந்தேகநபர் ஐந்தாண்டு இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனையை அனுபவித்து வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


சந்தேகநபர்கள் இருவரும் கல்கமுவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

No comments

Powered by Blogger.