Header Ads



கடலில் மூழ்கி, சிறுவன் வபாத்


மூதூர் , புதிய இறங்குதுறை வீதியிலுள்ள களப்புக் கடலில் மூழ்கி சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ள சம்பவம்  சனிக்கிழமை (01) மாலை இடம்பெற்றுள்ளது.


மூதூர் -அக்கரைச்சேனை சேர்ந்த சேர்ந்த 08 வயதுடைய இர்பான் இபாம் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார் .


வீதியோரத்திலுள்ள களப்புக் கடலில் மூன்று  சிறுவர்கள் குளித்துக் கொண்டிருந்த போது மூவரும் நீரில் மூழ்கியுள்ளனர் . அப்போது வீதியால் சென்றவர்கள் சிறுவர்களை காப்பாற்ற முயற்சித்துள்ளதுடன் இரண்டு சிறுவர்களை காப்பாற்ற முடிந்ததாகவும் மற்றயை சிறுவனை  காப்பாற்ற முடியாமல் சென்று சிறிது நேரத்தின் பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .


உயிரிழந்த சிறுவனின் ஜனாஸா தற்போது மூதூர் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் நீதிவான் விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது .


மேலும் சம்பவம் தொடர்பிரலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


தீஷான் அஹமட் 

No comments

Powered by Blogger.