Header Ads



வீட்டிற்குள் பாய்ந்த எரிபொருள் பௌசர்


திருகோணமலை - தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை_கண்டி பிரதான வீதியின் 98ம் கட்டை பகுதியில் இன்று (27) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.


கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த எரிபொருள் கொள்வனவு வாகனம் ஒன்று வீட்டு மதிலை உடைத்துக் கொண்டு வீட்டுக்குள் சென்றுள்ளது .


நித்திரை  கலக்கம் காரணமாக இவ் விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரியவருகிறது. 


இதில் எரிபொருள் கொள்கலனை செலுத்திய சாரதி மற்றும் உதவியாளர் காயமடைந்துள்ளனர். இச் சம்பவம் குறித்த மேலதிக விசாரனைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

No comments

Powered by Blogger.