Header Ads



வீடியோ கேமுக்கு அடிமையான 14 வயது சிறுவன், 9 வயது சிறுவன் மீது பலமுறை கத்திக்குத்த தாக்குதல்


ஹம்பாந்தோட்டை, அங்குனகொலபெலஸ்ஸ பிரதேசத்தில் நேற்று (5) கத்திக் குத்துக்கு இலக்காகி 9 வயது சிறுவன் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இவர் தனது வீட்டில் தனிமையில் இருக்கும் போது அயல் வீட்டில் வசிக்கும் 14 வயது சிறுவனால் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


காயமடைந்தவர் ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இந்த சம்பவத்தையடுத்து, சந்தேக நபரான 14 வயது சிறுவன் விஷம் அருந்தியுள்ள நிலையில் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


9 வயதான சிறுவனின் உடலில் சுமார் 6 முதல் 7 கத்தி குத்து காயங்கள் காணப்படுவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.


கத்தி குத்தை நடாத்திய 14 வயதான சிறுவன், வீடியோ விளையாட்டுக்களுக்கு அடிமையானவர் என தெரிய வருகிறது.


இந்த நிலையில், பிரதேச மக்கள் ஒன்று கூடி, சிறுவனை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.


இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அங்குணுகொலபெலஸ்ஸ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.