Header Ads



இயற்கை அனர்த்தம் - 13 மரணங்கள்


கனமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் காற்றினால் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக  இரண்டு நாட்களில் 13 மரணங்கள் பதிவாகியுள்ளன.


அந்த மரணங்களில் நான்கு சிறுமிகளும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.


விபத்துக்களால் ஐந்து பேர் காணவில்லை என்றும் 20 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் அனர்த்த நிவாரண மத்திய நிலையம் அறிவித்துள்ளது.


இந்த காலநிலை காரணமாக 20 மாவட்டங்களின் 177 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.