Header Ads



13 வயதான தேரரை, துஷ்பிரயோகம் செய்த 22 வயதான தேரர்


அனுராதபுரத்தில் இளம் பராய தேரர் ஒருவரை தகாத செயற்பாட்டிற்கு உட்படுத்திய மற்றுமொரு தேரர் கைது செய்யப்பட்டுள்ளார்.


13 வயதான தேரரை 22 வயதான தேரர் ஒருவர் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


தனிப்பட்ட தேவைக்காக விகாரைக்கு சென்ற வேளையில் தகாத செயற்பாடு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


துஷ்பிரயோகத்துக்குள்ளான தேரர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


கைது செய்யப்பட்ட தேரரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.