Header Ads



ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் 115 நாட்களே உள்ளன, எனக்கு 10 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது


ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் 50% வீதமானவர்கள் தயாராக இருந்தால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன் என பாராளுமன்ற உறுப்பினரும் தொழிலதிபருமான தம்மிக்க பெரேரா தெரிவித்தார்.


கட்சி தனக்கு பத்து நிபந்தனைகளை விதித்துள்ளதாகவும், அந்த நிபந்தனைகளின்படி தான் அனைத்து திட்டங்களையும் தயார் செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.


அந்த பத்து நிபந்தனைகளுக்கு அமைவாக எவ்வாறு பாதுகாப்பை கட்டியெழுப்புவது மற்றும் பொருளாதாரத்தை எவ்வாறு கட்டியெழுப்புவது என்பது தொடர்பிலும் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


மேலும், "நான் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர். என்ன நடக்கிறது என்று பார்ப்போம். ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் 115 நாட்களே உள்ளன." என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.