இந்தியாவில் கைதான இலங்கையர்களுக்கு ISIS பயங்கரவாத தொடர்பில்லை - தேர்தல்களுக்காக போலிப் பிரச்சாரம்
இந்தியாவின் அஹமதாபாத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்களுக்கு ISIS பயங்கரவாத தொடர்பில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மொஹமட் நுஸ்ரத், மொஹமட் நஃப்ரான், மொஹமட் ரஸ்தீன் மற்றும் மொஹமட் பாரிஸ் ஆகியோரே இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மே 20 அன்று கைது செய்யப்பட்ட இவர்கள் நால்வரும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடையவர்கள் அல்ல என இலங்கையர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இவர்களில் சிலருக்கு எதிராக குற்றவியல் வழக்குகள் உள்ளன.
இந்திய இலங்கை தேர்தல்களை அடிப்படையாக கொண்டு அவர்களுக்கு எதிரான இனவாத மதவார பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுவதாக முஸ்லிம் அமைப்பு ஒன்றின் தலைவர் சுட்டிக்காட்டினார்..
Post a Comment