Header Ads



டுபாயிலிருந்து முக்கிய குற்றவாளியை அழைத்துவந்த CID


பாதாள உலகத் தலைவரும் சர்வதேச போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபருமான மிதிகம ருவன் டுபாயில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.


குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் விசேட அதிகாரிகள் குழு ஒன்று மிதிகம ருவனை டுபாயில் இருந்து அழைத்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


அண்மையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து 'ஹரக் கட்டா' அல்லது நதுன் சிந்தகவை விடுவிக்க இவர் திட்டமிட்டவர் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.