Header Ads



வாய்ப்பு இருந்திருந்தால் பிரபாகரன் தப்பியிருப்பார், தோல்வியடையப் போகின்றோம் என உணர்ந்திருப்பார்


போர் நகர்வுகளின் அடிப்படையில் ஒரு கட்டத்துக்கு மேல் போரில் தோல்வியடையப் போகின்றோம் என்று புலிகளின் தலைவர் பிரபாகரன்நன்கு உணர்ந்திருப்பார். அந்த சந்தர்ப்பத்தில் ஏதேனும் ஒரு வழி இருந்திருந்தால் தப்பிச் சென்றிருக்கலாம். ஆனால் அவ்வாறு இடம்பெறவில்லை என முன்னாள் இராணுவத் தளபதியும், பாதுகாப்பு பதவி நிலை பிரதானியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,  


இறுதிக்கட்ட போரில் சுமார் 12ஆயிரத்திற்கும் அதிகமான புலிகள் இராணுவத்திடம் சரணடைந்தனர். அந்த சந்தர்ப்பத்தில் பிரபாகரனுக்கும் சரணடைய வாய்ப்பு இருந்திருக்கலாம். ஆனால் விடுதலைப் புலிகளின தலைவர் பிரபாகரனை உயிருடன் மீட்டுச் செல்ல முயற்சிகள் இடம்பெற்றதா என்பதை உறுதிப்படுத்தக்கூடிய எந்த தகவல்களும் இல்லை.


58ஆவது படையணியின் தளபதியாகவே இதனை நான் கூறுகின்றேன். பொதுவாகவே பிரபாகரனை மீட்டுச் செல்வதற்கு அல்லது பாதுகாப்பாக அழைத்துச் செல்வதற்கு முயற்சிகள் இடம்பெற்றிருக்கலாம். இத்தகைய முயற்சிகளை புலிகளின் இரண்டாம் நிலை தலைவர்கள் கூடச் செய்திருக்கலாம்.


ஆனால் இறுதிக் கட்ட போரில் இருந்து பிரபாகரன் தப்பித்துச் செல்வது என்பது சாத்தியமற்ற விடயமாகவே இருந்தது. ஏனெனில் சுற்றிவளைக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு வலயங்கள் என்பனவற்றிலிருந்து மீண்டு செல்வது என்பது எளிதான விடயமல்ல.


அவ்வாறானதொரு வாய்ப்பு இருந்திருந்தால் நிச்சயம் பிரபாகரன் தப்பிச் சென்றிருப்பார். ஆனால் இறுதிக்கட்ட போர் அனைத்து பக்கங்களிலும் அடைக்கப்பட்டதாகவே முன்நகர்த்தப்பட்டது.


போர் நகர்வுகளின் அடிப்படையில் ஒரு கட்டத்துக்கு மேல் போரில் தோல்வியடையப் போகின்றோம் என்று புலிகளின் தலைவர் பிரபாகரன் நன்கு உணர்ந்திருப்பார்.


அந்த சந்தர்ப்பத்தில் ஏதேனும் ஒரு வழி இருந்திருந்தால் தப்பிச் சென்றிருக்கலாம். ஆனால் அவ்வாறு இடம்பெறவில்லை. இதற்கு ஆதாரமாக அவரது உயிரற்ற உடல் எமக்கு கிடைத்தது என குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.