ஈரான் ஜனாதிபதிக்கு கொழும்பில் ஜனாஸா தொழுகை
(அஷ்ரப் ஏ சமத்)
விபத்தில் மரணமடைந்த ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைஸ் மற்றும் வெளிநாட்டு அமைச்சர் ஏனையவர்களுக்கும் கொழும்பு 2 கொம்பனி வீதியில் உள்ள் வேகந்த ஜூம்ஆப் பள்ளிவாசலில் இன்று ஜூம்ஆத் தொழுகையின் பின்னர் ஜனசாத் தொழுகையும் துஆப் பிராத்தனையும் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் ஈரான் நாட்டின் இலங்கைத் துாதுவர் சாஜிடி அபயார் கொழும்பு ஈரான் கலாச்சாரப் நிலையத்தின் பணிப்பாளருமான கலாநிதி பஹ்மன் மொசாமி ஈரான் சார்பாக கலந்து கொண்டு ஜனாசாத் தொழுகையிலும் கலந்து கொண்டார்
இந் நிகழ்வில் ஜனாசாத் தொழுகையை மௌலவி மௌலானா நசீர் புஹாதீன் துஆப் பிராத்தனையை மின்ஹாஜ் அமீர் மனாஹிப் மொளலவி நிகழ்த்தினார்கள். இந் நிகழ்வில் பள்ளிவாசல் பரிபலான சபைத் தலைவர் மற்றும் செயலாளர் இப்பிரதேச வாழ் மக்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment