Header Ads



பலஸ்­தீ­ன சால்வை அணிந்ததால், என்னை 'சிங்­கள தம்­பியா' என்றார்கள்


பலஸ்­தீன விவ­கா­ரத்தில் இலங்கை அர­சாங்கம் இரட்டை நிலைப்­பாட்டைக் கொண்­டி­ருப்­ப­தாக கடும் விமர்­ச­னத்தை முன்­வைத்த எதிர்க்­கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், இஸ்­ரே­லு­ட­னான அனைத்து இரா­ஜ­தந்­திர உற­வு­க­ளையும் உட­ன­டி­யாகத் துண்­டிக்க வேண்டும் என்றும் வலி­யு­றுத்­தினர். பலஸ்­தீனின் தற்­போ­தைய நிலை தொடர்­பாக சபை ஒத்­தி­வைப்பு வேளை பிரே­ர­ணையில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே எம்.பி.க்கள் இவ்­வாறு தெரி­வித்­தனர்.


பலஸ்­தீ­னர்­க­ளுக்கு இலங்கை தனது ஒத்­து­ழைப்பை வழங்க வேண்டும். சர்­வ­தேச யுத்த கோட்­பா­டு­களை இஸ்ரேல் கடைப்­பி­டிக்கும் வரை இஸ்­ரே­லுக்கு தொழில் வாய்ப்­பு­க­ளுக்­காக இலங்­கை­யர்­களை அனுப்­புதை தற்­கா­லி­க­மாக இடை­நி­றுத்த வேண்டும். இஸ்ரேல் பிர­தமர் பெஞ்­சமின் நெதன்­யா­குவை பயங்­க­ர­வாதி என்று குறிப்­பி­டு­வதை தவிர்க்க முடி­யாது என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் டிலான் பெரேரா தெரி­வித்தார்.


அவர் மேலும் உரை­யாற்­றி­ய­தா­வது, 2024 ஆம் ஆண்டு வரவு செலவு திட்­டத்தின் போது பலஸ்­தீ­னர்­க­ளுக்கு ஆத­ரவு வழங்கும் வகையில் சால்வை அணிந்து சபைக்கு வருகை தந்தேன். அப்­போது ஒரு­சிலர் என்னை பார்த்து ‘டிலான் சிங்­கள தம்­பியா’ என்று குறிப்­பிட்­டார்கள்.கடந்த காலங்களில் தமிழர்களின் உரிமைகளுக்காக பேசி போது’ டிலான் கொடியா’ என்றும் ஒருசிலர் என்னை விமர்சித்தார்கள்.


பலஸ்தீனர்கள் எதிர்கொண்டுள்ள அவல நிலையை சிங்களம்,கத்தோலிக்கம் மற்றும் இஸ்லாம் என்ற மத கோணத்தில் இருந்துக்கொண்டு பார்க்க கூடாது. மனிதாபிமான அடிப்படையில் பார்க்க வேண்டும்.பலஸ்தீனர்களுக்கு எதிராக போர் தொடுக்கிறோம் என்று பெருமைப்பட்டுக் கொள்ளும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு எதிராக உலகளாவிய மட்டத்தில் தற்போது எதிர்ப்புக்கள் தீவிரமடைந்துள்ளன.இந்த எதிர்ப்புக்கள் நிச்சயம் வெற்றி பெறும்.


பயங்கரவாதி பெஞ்சமின் நெதன்யாகுவின் பயங்கரவாத தாக்குதலினால் காஸாவில் இதுவரை 34 ஆயிரத்து 183 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன்,77 ஆயிரத்து 804 பேர் படுகாயமடைந்துள்ளனர். தாக்குதல்களினால் காஸா பகுதியில் 20 நிமிடத்துக்கு ஒரு குழந்தை கொல்லப்படுவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது..


பெஞ்சமின் நெதன்யாகுவின் பயங்கரவாத தாக்குதலினால் காஸாவில் மரணங்கள் மிகுதியாகியுள்ளன. 62 சதவீத மனித குடியிருப்புக்கள் முழுமையாகவும், பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. இஸ்ரேல் இராணுவம் காஸா பகுதியில் உள்ள வைத்தியசாலைகள், பள்ளிவாசல்கள் மற்றும் அகதி முகாம்கள் மீதே தாக்குதல்களை நடத்துகின்றன.ஆகவே இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை பயங்கரவாதி என்று குறிப்பிடுவதை தவிர்த்து வேறு வார்த்தைகள் ஏதும் கிடையாது.


பலஸ்தீனர்களுக்கு இலங்கை தனது ஒத்துழைப்பை வழங்க வேண்டும். சர்வதேச யுத்த கோட்பாடுகளை இஸ்ரேல் கடைப்பிடிக்கும் வரை இஸ்ரேலுக்கு தொழில் வாய்ப்புகளுக்காக இலங்கையர்களை அனுப்புவதை தற்காலிகமாக இடைநிறுத்த வேண்டும் என்றார்.– Vidivelli

No comments

Powered by Blogger.