பலஸ்தீனம் குறித்து சவுதி அரேபியா, சர்வதேச சமூகத்திடம் விடுத்துள்ள கோரிக்கை
நார்வே, ஸ்பெயின், அயர்லாந்து ஆகிய நாடுகள் பாலத்தீனத்தை ஒரு முறையான அங்கீகரிக்கப்பட்ட நாடாக அடுத்த வாரம் அறிவிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளன.
இந்த முடிவை வரவேற்றுள்ள சௌதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சகம் இதுவொரு நேர்மறையான நடவடிக்கை என்றும் மற்ற நாடுகளும் இதேபோன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளது.
கடந்த 1967ஆம் ஆண்டு மாநாட்டின்படி, பாலத்தீன அரசை அங்கீகரிக்குமாறு சர்வதேச சமூகத்தை, குறிப்பாக பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்களை (இன்னும் பாலத்தீன அரசை அங்கீகரிக்காதவர்கள்) சௌதி வெளியுறவு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
இது பாலத்தீன மக்களின் உரிமைகளைப் பெறுவதற்கு உதவும் எனவும் அனைவருக்கும் நீதி மற்றும் விரிவான அமைதிக்கு வழி வகுக்கும் எனவும் வெளியுறவு அமைச்சகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
Post a Comment