Header Ads



ஈஸ்டர் தாக்குதலில் படுகாயமடைந்து, சிகிச்சை பெற்றுவந்தவர் உயிரிழப்பு


உலகையே அதிரவைத்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலில் பலத்த காயமடைந்த பெண் உயிரிழந்தார்.


திலினி ஹர்ஷனி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதிகளின் இலக்குகளில் ஒன்றான நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தின் மீதான தாக்குதலில் இவர் படுகாயமடைந்திருந்தார்.


அந்த தாக்குதலில் அவரது மகனும் உயிரிழந்திருந்தார்.


தாக்குதலில் படுகாயம் அடைந்த பெண், சுமார் 5 ஆண்டுகள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

No comments

Powered by Blogger.