Header Ads



இலங்கை - சவூதி உறவுகளை புதிய, உச்சத்திற்கு உயர்த்தப்போவதாக தூதுவர் அமீர் அஜ்வத் அறிவிப்பு


சவூதி அரேபிய இராச்சியத்திற்கான இலங்கையின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள உமர் லெப்பை அமீர் அஜ்வத் 24 மே 2024 அன்று தனது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றார். 


இந்நிகழ்வை ரியாத்தில் உள்ள இலங்கை தூதரக தூதரக ஊழியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.


ஊழியர்களிடையே உரையாற்றிய தூதுவர் அமீர் அஜ்வத், இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையில் தற்போதுள்ள இருதரப்பு உறவுகளை புதிய உச்சத்திற்கு உயர்த்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.


தூதுவர் அமீர் அஜ்வத் இலங்கை இராஜதந்திர சேவையில் 26 வருட அனுபவமுள்ள தொழில் இராஜதந்திரி ஆவார். 







No comments

Powered by Blogger.