Header Ads



இலங்கை வந்த பெண்ணுக்கு, காத்திருந்த அதிர்ச்சி


இலங்கைக் சுற்றுலா வந்த பெண்ணொருவரின் பணம் மற்றும் உடமைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


கொழும்பில் இருந்து எல்லே நோக்கி பயணமான பிரித்தானியா பெண்ணொருவரின் பணம் மற்றும் கடவுச்சீட்டு உட்பட பல ஆவணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.


சமூகவலைத்தளத்தில் மிகவும் பிரபலமான பெண்ணொருவர் நாடு நாடாக சுற்றுலா சென்று அதனை காணொளியாக பதிவிட்டு வருகிறார்.


அதற்கமைய இலங்கை வந்த நிலையில் அவரின் பெறுமதியான உடமைகள் திருடப்பட்டுள்ளன.


பையில் தனது விமான டிக்கெட், கேமரா, லேப்டாப் மற்றும் 2,000 டொலர் பணம் இருந்ததாக பாதிக்கப்பட்ட பெண்ணான ஸ்கை மகோவன் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.