Header Ads



டயானா விவகாரத்தில் ரணில் மீதும், சபாநாயகர் மீதும் முஜிபுர் ரஹ்மானின் பாய்ச்சல்


டயனா கமகே இந்த நாட்டு பிரஜை அல்ல என்பதை ஜனாதிபதியும் அரசாங்கமும் அறிந்திருந்தும் ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிராக அவரை தவறாக பயன்படுத்தி வந்ததாக ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.யான முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.


பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (13) இடம்பெற்ற நிதிக் கட்டளைகள் மீதான விவாதத்தில்  உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,


உள்ளூராட்சி சபைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக நான் நேர்மையாகவே எனது எம்.பி பதவியை இராஜிநாமா செய்தேன். அதனாலேயே என்னால்   மீண்டும் இந்த சபைக்கு வர முடிந்தது. ஆனால் டயனா கமகே நேர்மையற்ற முறையில் எம்.பி.யானதால் வந்ததால், அவருக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவி இல்லாமல் போயுள்ளது.


டயனா கமகே இந்த நாட்டு பிரஜை அல்ல என்பதை அவர் ஆரம்பத்தில் எங்களுக்கும் மறைத்திருந்தார். அது தொடர்பான உண்மை எமக்கு தெரியவந்ததுடன் அது தொடர்பில் நாங்கள் நீதிமன்றில் முறையிட்டோம். ஆனால் ஜனாதிபதியும் அரசாங்கமும் டயனாவை பாதுகாத்து வந்தனர் . ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிராகவும் சஜித் பிரேமதாசவுக்கு எதிராகவும் செயற்பட ஜனாதிபதியும் அரசாங்கம் அவரை பயன்படுத்தி வந்தனர் .  


டயனா கமகே இராஜதந்திர கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ள விண்ணப்பித்திருந்தபோது, அவர் இந்த நாட்டு பிரஜை அல்ல என தெரிவித்து, அவருக்கு கடவுச்சீட்டு விநியோகிக்க முடியாது என குடிவரவு குடியகல்வு முன்னாள் கட்டுப்பாட்டு அதிகாரி பாராளுமன்ற முனனாள் செயலாளருக்கு அறிவித்திருந்தார்.


மேலும் டயனா கமகேவுக்கு இராஜதந்திர கடவுச்சீட்டு விநியோகிக்க முடியாது என குடிவரவு குடியகல்வு முன்னாள் கட்டுப்பாட்டு அதிகாரி தெரிவித்திருந்தபோதும் தற்போதுள்ள கட்டுப்பாட்டு அதிகாரி கடந்த 2022, 09, 12ஆம் திகதி அன்று அவருக்கு இராஜதந்திர கட்வுச்சீட்டு விநியோகித்துள்ளார் .அப்போது நாட்டின் ஜனாதிபதியாக இருந்தவர் ரணில் விக்ரமசிங்க.


எமது நாட்டு பிரஜை அல்லாத ஒருவருக்கு தற்போதுள்ள குடிவரவு குடியகல்வு  கட்டுப்பாட்டு அதிகாரி எந்த அடிப்படையில் கடவுச்சீட்டு விநியோகித்தார். அவருக்கு அதற்காக யார் அழுத்தம் கொடுத்தார் என்பது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும்.


அதேவேளை   கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் நான் இந்த சபையில் உரையாற்றும்போது, இந்த சபையில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் இருக்கிறார். அது தொடர்பில்  தேடிப்பார்க்குமாறு சபாநாயகரை கேட்டுக்கொண்டிருந்தேன். ஆனால் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும்வரை சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார். 

No comments

Powered by Blogger.