Header Ads



நெலும் மாவத்தையில் பதற்றம் - அமைச்சருக்கு ஏற்பட்ட நெருக்கடி


பாராளுமன்றத்திற்கு அருகில் உள்ள நெலும் மாவத்தையை  அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சற்று முன்னர் கடக்க முற்பட்டதால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.


 பல சிவில் அமைப்புக்கள் ஒன்றிணைந்து பாராளுமன்றத்திற்கு அருகாமையில் இருந்து நெலும் மாவத்தை வளாகம் வரையிலும் எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்டுள்ளன.


  நெலும் மாவத்தை நுழைவாயிலுக்கு அருகில் ஆர்ப்பாட்டக்காரர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தியதால் பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.


அமைச்சர் ரணதுங்க அவ்வீதியூடாக செல்ல முற்பட்ட போது, இரு தரப்பிலும்  ஆர்ப்பாட்டக்காரர்கள் அவரை நோக்கி சத்தமிட்டனர்.


No comments

Powered by Blogger.