Header Ads



அரசாங்கத்திடமிருந்து வரும் வாக்குறுதிகள் சகலதும் மக்களை ஏமாற்றவே


பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகன அனுமதிப்பத்திரம் அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய நிறைவேற்றப்பட்டுள்ளதாக நேற்று தமக்கு தெரியவந்ததாக பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.


பெரும்பாலான மக்கள் வாகனங்களை இறக்குமதி செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் ஆனால் அடுத்த வருடமே வாகனங்களை இறக்குமதி செய்ய முடியும் என அரசாங்கம் கூறுவதாகவும் அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.


"பெரும்பாலானோர் வாகனங்களை இறக்குமதி செய்ய எதிர்பார்க்கின்றனர். ஆனால், அடுத்த ஆண்டு தான் வாகனங்களை இறக்குமதி செய்ய முடியும் என அரசு கூறியது. ஆனால், உங்களின் கோரிக்கையை ஏற்று எம்.பி.,க்களுக்கு அனுமதிப்பத்திரம் நிறைவேற்றப்பட்டதாக கேள்விப்பட்டேன்” என அவர் அரசாங்க எம்.பிக்களைப் பார்த்துக் கூறினார்.


விவாதத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அரச ஊழியர்களின் சம்பளம் அடுத்த வருடம் அதிகரிக்கப்படும் என கூறியது போன்ற வாக்குறுதிகள் அனைத்தும் மக்களை ஏமாற்றுவதற்காக வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.