Header Ads



மயங்கி வீழ்ந்து சிகிச்சை பெற்று வந்தவர் வபாத்


மட்டக்களப்பு  போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 16 வயதுடைய சிறுவன் புதன்கிழமை (29) உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .


வாழைச்சேனை, ஹைராத் வீதியைச் சேர்ந்த ஆசிப் ஷைபுல்லாஹ் எனும் சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார் .


குறித்த சிறுவன் கடந்த வெள்ளிக்கிழமை (24) அன்று மயங்கி விழுந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உணர்வற்ற நிலையில் சிகிச்சை பெற்றுவந்த குறித்த சிறுவன் புதன்கிழமை (29) மரணமடைந்துள்ளார்.


மேலும் சிறுவனின் உடல் வைத்திய பரிசோதனைகளின் பின்னர் வியாழக்கிழமை (30) பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.