Header Ads



80 வயதில் O/L பரீட்சை எழுதிய முதியவர்


கல்வியை பயில வயது ஒரு தடை இல்லையென 80 முதியவர் ஒருவர் நிரூபித்துள்ளார். நடைபெற்று வரும் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் 80 முதியவர் ஒருவர் பரீட்சை எழுதிய சம்பவம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.


பாணந்துறை, கிரிபெரிய பகுதியை சேர்ந்த 80 வயதான நிமல் சில்வாவே இவ்வாறு கா.பொ.த பரீட்சை எழுதியுள்ளார்.


இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற அவர் விசேடமாக கணித பாட பரீட்சையில் தோற்றியுள்ளார்.


இவர் தொடர்பான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருவதுடன் பலரும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.    

No comments

Powered by Blogger.