Header Ads



சீன விஞ்ஞானிகள் உருவாக்கிய புதிய வைரஸ் - 3 நாட்களில் உயிரைப் பறிக்கும் திறன் கொண்டதாம்


சீனாவின் ஹெபெய் (Hebei) மருத்துவப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் எபோலா (Ebola) வைரஸின் சில பகுதிகளைப் பயன்படுத்தி புதிய வைரஸை உருவாக்கியுள்ளனர்.


இந்த மரபணு மாற்றப்பட்ட வைரஸ் மூன்று நாட்களில் உயிரைப் பறிக்கும் திறன் கொண்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


சீனா உருவாக்கியுள்ள புதிய மரபணு மாற்றப்பட்ட வைரஸ் அச்சுறுத்தலாக அமையலாம் என பொதுமக்கள் மத்தியில் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.


சீன ஆராய்ச்சியாளர்கள் எபோலா வைரஸில் உள்ள கிளைகோபுரோட்டீனை இந்த வைரஸில் பயன்படுத்தியுள்ளதோடு இது செல்களைப் பாதித்து மனித உடல் முழுவதும் விரைந்து பரவும். அதனால் இந்த வைரஸ் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் பல்வேறு தரப்பினராலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.