Header Ads



ஆட்டோவை திருடிச்சென்ற 15 வயது சிறுவன்


முச்சக்கர வண்டி உட்பட பல திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய 15 வயது சிறுவன் எகொடஉயன பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


மொரட்டுவ கட்டுகுருந்த பிரதேசத்தில் திருடப்பட்ட முச்சக்கர வண்டியில் பயணித்த போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


முச்சக்கரவண்டியின் சாரதியாக இருந்த சந்தேக நபரிடம் இருந்து 5,200 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.


பின்னர் சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட  நீண்ட விசாரணையின் போது, ​​எகொடஉயன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூன்று வீடுகளில் திருடப்பட்டு குறைந்த விலைக்கு பலருக்கு விற்பனை செய்யப்பட்ட இரண்டு ஸ்மார்ட் போன் உள்ளிட்ட பொருட்களை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.