Header Ads



டயானாவைப் போன்று 10 Mp க்கள் இரட்டைக் குடியுரிமையுடன் உள்ளனர்


நாட்டில் மேலும் 10 பாராளுமன்ற உறுப்பினர்கள் இரட்டைக் குடியுரிமை பெற்றுள்ளதாக ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.


உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை சற்று கவனத்தில் கொள்ளுமாறு இந்த 10 பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.


டயானா கமகேவைப் போன்று 10 பாராளுமன்ற உறுப்பினர்கள் இரட்டைக் குடியுரிமையைக் கொண்டிருப்பதால் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு தகுதியற்றவர்கள் என தேரர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.


இந்த விடயங்கள் தொடர்பில் நீதிமன்றத்திற்கு செல்வது நேரத்தையும் பணத்தையும் வீணடிக்கும் செயலாகும் எனவும் சோபித தேரர் தெரிவித்துள்ளார். 


இந்த எம்.பி.க்கள் தங்கள் பதவிகளை மரியாதையுடன் ராஜினாமா செய்யுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என்று சோபித தேரர் கூறியதுடன், கட்சித் தலைவர்கள் தங்கள் பிரதிநிதிகளை கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நினைவுபடுத்தினார்.  

No comments

Powered by Blogger.