Header Ads



SJB யின் மிகப்பெரிய கூட்டணி - பீரிஸ் குழுவுடன் முதலாவது உடன்படிக்கை, வரலாற்றில் அதிக மக்கள் பங்கேற்புடன் மே தினம்


எதிர்வரும் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல்களை இலக்காக கொண்டு உருவாக்கப்படும் மிகப்பெரிய கூட்டணியின் முதல் கட்ட நிகழ்வை நாளை (05) ஆரம்பிப்போம். பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையிலான குழுவுடன் ஐக்கிய மக்கள் சக்தி உடன்படிக்கையில் கைச்சாத்திடவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் இன்று (04) தெரிவித்தார்.


கொள்கை ரீதியிலான விடயங்கள் தொடர்பிலான பல சுற்று கலந்துரையாடலின் பின்னர் ஏற்பட்ட உடன்பாட்டின் விளைவாக பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தலமையிலான குழுவினர் இவ்வாறு இணைந்து கொள்கின்றனர். அதிகாரத்தை பெறும்  வியூகங்கள் குறித்தும் கூட்டணி செயல்பட்டு வருகிறது. தேர்தல் முடியும் வரை பல்வேறு கட்சிகள் பல்வேறு அமைப்புகளுடன் கூட்டணி அமைக்கும் நடவடிக்கை இடம்பெறவுள்ளது. 2020 தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து  போட்டியிட்டவர்கள் எம்மோடு உள்ளனர். நாளை தினம் புதிய தரப்பினர் இணைந்து கொள்வர். எதிர்காலத்திலும் எம்மோடு பல தரப்பினரும் இணைந்து கொள்ளவுள்ளனர்.


அத்துடன், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடனான விவாதத்திற்கு அனுரகுமார திஸாநாயக்கவை அழைப்பு விடுக்குறோம்.சிங்கள புது வருடத்திற்கு முன்னர் நாம் விவாதத்திற்கு தயாராக உள்ளோம். மே 1 ஆம் திகதிக்கு முன்னர் விவாதத்துக்கு வாருங்கள்.


மே முதலாம் திகதி இலங்கை வரலாற்றில் அதிக மக்கள் பங்கேற்புடன் நடந்த மே தின கூட்டத்தை இம்முறை ஐக்கிய மக்கள் சக்தி நடத்தும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் மேலும் தெரிவித்தார்.


எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று(04) நடந்த ஊடக சந்திப்பிலயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.