Header Ads



ஈஸ்டர் தாக்குதல் குறித்து, மைத்திரிபாலவுக்கு ஆரம்பத்திலிருந்தே தெரியும்



ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆரம்பத்திலிருந்தே தெரியும் என கத்தோலிக்க திருச்சபை நம்புவதாக தந்தை சிறில் காமினி தெரிவித்துள்ளார்.


கடந்த ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை பொலிஸ் மா அதிபர் கட்டுவாப்பிட்டிக்கு விஜயம் செய்தமை தொடர்பில் விசனம் தெரிவிக்கும் வகையிலும், பாதிக்கப்பட்டவர்களின் நலம் விசாரிப்பதற்காகவும் பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.


கடந்த ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்திற்குச் சென்று பாதுகாப்பு நிலைமைகளை பார்வையிட்டதுடன் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நலன்களையும் கேட்டறிந்தார்.


கத்தோலிக்க திருச்சபை இன்று -03- ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தியதுடன், பொலிஸ் மா அதிபரின் நடவடிக்கையை விமர்சித்துள்ளது.

No comments

Powered by Blogger.