Header Ads



வலிப்பு நோய் உள்ளவர், ஆற்றில் மூழ்கி வபாத்


மட்டக்களப்பு – மாவடிஓடை ஆற்றில் மூழ்கி கூலித்தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.


ஏறாவூர் பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 57 வயதுடைய முஸ்தபா மகுமுது என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக, கரடியனாறு பொலிசார் தெரிவித்தனர்.


பசு மாட்டுப்பண்ணையொன்றில் சுமார் 15 வருட காலமாக கூலித்தொழிலாளியாக இருந்த இவர் அங்குள்ள ஆற்றில் குளிப்பது வழக்கமாகும்.


சம்பவ தினம் ஆடைகளை கழுவுவதற்காக ஆற்றில் குளிக்கச்சென்றவேளை நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.


இவருக்கு அடிக்கடி வலிப்பு நோய் ஏற்படுவதாக இவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.


இதனைத் தொடர்ந்து ஆற்றில் கற்பாறைகளுக்குள் சிக்கியிருந்த இவரது ஜனாஸா நேற்று (31) மாலை மீட்கப்பட்டுள்ளது.


திடீர்மரண விசாரணையதிகாரி எம்.எஸ். எம். நஸிர் சம்பவ இடத்திற்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டதுடன் விசாரணைகளை மேற்கொண்டார்.


அதையடுத்து பிரேத பரிசோதனை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நடைபெற்றது.


கரடியனாறு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


ஏறாவூர் நிருபர்- நாஸர்

No comments

Powered by Blogger.