Header Ads



ராஜினாமா செய்த பொதுஜன பெரமுன Mp தெரிவித்துள்ள விடயம்


அண்மையில் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்த அனுராதபுர மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன, கனடாவில் வேலை விசாவை எதிர்பார்த்திருப்பதாக தெரிவித்துள்ளார்.


தற்போது கனடாவில் இருக்கும் பிரேமரத்ன, உள்ளூர் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், கனடாவில் அரசியல் தஞ்சம் கோரவில்லை என்றும், வேலை விசாவை எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார்.


கனடாவில் இருக்கும் போதே தனது இராஜினாமா கடிதத்தை அனுப்பியதாகவும் அவர் குறிப்பிட்டார்.


அரசியலில் இருந்து நான் எதையும் கற்கவில்லை, நான் நடிப்பில் சம்பாதித்தது மட்டுமே தற்போது என்னிடம் உள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.