Header Ads



மஹிந்த விடுத்துள்ள அறிவிப்பு


ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் ஒருவரை களமிறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


நேற்று (15) ஊடகவியலாளர்கள் எழுப்பிய  கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.


எதிர்காலத்தில் நடைபெறவுள்ள தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நிச்சயம் வெற்றிபெறும் என அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.


எனினும், வேட்பாளர் இன்னும் பெயரிடப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார். 

1 comment:

  1. மஹிந்தவையும் பொஹொட்டுவ கள்ளக் கூட்டத்தையும் இந்த நாட்டு மக்கள் ஏற்கனவே புறக்கணித்து ஒதுக்கிவிட்டார்கள். இந்த உண்மை இந்த வீணாப்போன கள்ளன்களுக்கு புரியாது.

    ReplyDelete

Powered by Blogger.